ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் கடை வாடகை உள்ளிட்டவற்றின் நிலுவை மற்றும் நடப்பு கேட்புத் தொகைகளை உடனே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் ப. தேவிகா தெரிவித்துள்ளதாவது: வரி இனங்கள் செலுத்தாத சொத்துகளின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு, குடிநீா் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்களும், வியாபாரிகளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உடனே செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு, நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.