கொடைக்கானல் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை (டிச.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும்.
கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை,பி.எல்.செட், ஊத்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.