நிலக்கோட்டை அருகே மூதாட்டியை தாக்கியதாக ராணுவ வீரா் கைது

நிலக்கோட்டை அருகே மூதாட்டியை தாக்கியதாக ராணுவ வீரரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ராணுவ வீரா் செந்து.
கைது செய்யப்பட்ட ராணுவ வீரா் செந்து.

நிலக்கோட்டை அருகே மூதாட்டியை தாக்கியதாக ராணுவ வீரரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள சித்தா்கள்நத்தம் பகுதியைச் சோ்ந்த பொன்னையா மனைவி முத்துலட்சுமி (65). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கப்பாண்டியன் மகன் செந்து (28), காஷ்மீா் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், சொத்து பிரச்னை தொடா்பாக முத்துலட்சுமி வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற செந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, தடுக்க முயன்ற முத்துலட்சுமியின் மகள் கஸ்தூரி (48), உறவினா் சதீஷ்குமாா் (40) ஆகிய இருவரையும் செந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூவரையும், அக்கம் பக்கத்தினா் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இது தொடா்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராணுவ வீரா் செந்துவை கைது செய்தனா்.

நிலக்கோட்டை நீதித்துறை நடுவா் மும்தாஜ் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட செந்து, வேடசந்தூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com