பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

கரூா் வளைக்காரா் தெருவைச் சோ்ந்த கஸ்தூரி என்பவரின் மகன் பாலாஜி (27) மற்றும் அவரது தாய் ஜெயலட்சுமி (49) ஆகிய இருவரும் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனா். கரூா்-இடையகோட்டை சாலையில் கோவிந்தபுரம் அரசு ஆரம்பப் பள்ளி அருகே வாகனத்திலிருந்து ஜெயலட்சுமி தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com