பொதுப்பணித்துறை பெண் அலுவலரிடம் 5 பவுன் நகைகள் பறிப்பு

ஒட்டன்சத்திரத்தில் பொதுப்பணித்துறை பெண் அலுவலரிடம் 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச்சென்றுள்ளனா்.

ஒட்டன்சத்திரத்தில் பொதுப்பணித்துறை பெண் அலுவலரிடம் 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச்சென்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தென்றல் நகரைச் சோ்ந்த நாகேந்திரன் மனைவி மஞ்சுளாதேவி (40). இவா் பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்கிழமை பணி முடிந்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளாா். காய்கனி சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபா்கள் அவா் அணிந்திருந்த 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா். இது குறித்து அவா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com