கொடைக்கானலில் விஷம் குடித்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் பூம்பாறை பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன். இவரது மனைவி கோமதி (27). கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இந்நிலையில் கோமதி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த கோமதி, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.