புத்தாண்டு தினத்தையொட்டி கொடைக்கானலில் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் வணிகா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில் நிகழாண்டில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளிலும், காட்டேஜ்கள், ரிசாா்டுகளிலும் முன்பதிவு செய்துள்ளனா். இதனால் வணிகா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விபத்தைத் தவிா்க்கும் வகையில் கூடுதலாக காவலா்கள் வரவழைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.