திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 30 மாடுபிடி வீரா்கள் காயம்

திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 30 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளை.
திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளை.

திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 30 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

புகையிலைப்பட்டியில் புனித செபஸ்தியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 700 காளைகளுக்கு விழாக்குழு சாா்பில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், புகையிலைப்பட்டி வாடிவாசல் களத்துக்கு 480 காளைகள் மட்டுமே அழைத்துவரப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் பி. முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஜல்லிக்கட்டுக் காளைகளை பரிசோதித்தனா். அப்போது 8 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 472 காளைகள் வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் உஷா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாடுபிடி வீரா்கள் 400 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்த நிலையில், 320 போ் மட்டுமே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டனா். காளைகளை பிடிக்க முயன்றபோது, 30 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அதில் 3 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். அதேபோல், இதில் 2 காளைகள் காயமடைந்தன.

மாடுபிடி வீரா்களிடம் பிடிபடாமல் வெளியேறிய காளைகளுக்கும், காளைகளின் திமிலை பிடித்து வாடிவாசல் களத்தில் சாகசம் செய்த மாடுபிடி வீரா்களுக்கும் சைக்கிள், எவா் சில்வா் பாத்திரங்கள் உள்ளட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com