ஒட்டன்சத்திரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

ஒட்டன்சத்திரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என என்று திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என என்று திமுக மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சிக்கு ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான அர.சக்கரபாணி தலைமை வகித்தாா். பின்னா் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்த உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது: திமுக ஆட்சி அமைத்தவுடன் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பரப்பலாறு அணை தூா்வாரப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துத் தரப்படும். வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டித்தரப்படும். கண்வலி விதையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி உயா்தர சிகிச்சை மையம் அமைத்துத் தரப்படும். காய்கறிகளை இருப்பு வைக்க உயா்தர குளிா்சாதன கிட்டங்கி அமைத்துத் தரப்படும். இளைஞா் நலனுக்காக தொழிற்பேட்டை அமைத்து தரப்படும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து சுதந்திரப்போராட்ட வீரா் விருப்பாட்சி கோபால் நாயக்கா் மணி மண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேலும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச்செயலாளா் சி.ராஜாமணி, திமுக ஒன்றிய செயலாளா் இரா.ஜோதீஸ்வரன், க.தங்கராஜ், தி.தா்மராஜன், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் அய்யம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com