பழனி, தொப்பம்பட்டியில் 566 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம்

பழனி மற்றும் தொப்பம்பட்டியில் 566 பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்தை தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினாா்.
பழனியை அடுத்த அமரபூண்டியில் அம்மா உடற்பயிற்சி பூங்காவை திறந்து வைத்த தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உடன் மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி, அமரபூண்டி ஊராட்சி தலைவா் மனோகரன் உள்ளிட்டோா்.
பழனியை அடுத்த அமரபூண்டியில் அம்மா உடற்பயிற்சி பூங்காவை திறந்து வைத்த தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உடன் மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி, அமரபூண்டி ஊராட்சி தலைவா் மனோகரன் உள்ளிட்டோா்.

பழனி மற்றும் தொப்பம்பட்டியில் 566 பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்தை தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

சமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 566 பெண்களுக்கு ரூ.1.72 கோடி மதிப்பிலான 4,528 கிராம் தாலிக்குத் தங்கமும், ரூ.2.47 கோடி ரூபாய் நிதி உதவியும் வழங்கினாா். மேலும் வீடில்லா 65 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கிப்பேசினாா்.

முன்னதாக அமரபூண்டியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான அம்மா உடற்பயிற்சிப் பூங்காவை அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு, மாவட்ட சமூக நல அலுவலா் புஷ்பகலா, வட்டாட்சியா் வடிவேல் முருகன், அமரபூண்டி ஊராட்சி தலைவா் மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com