திண்டுக்கல்லில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவருக்கு 3 நாள்களுக்கு முன் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து, சில மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை மற்றொரு மாணவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட தகவலை, பிற பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களே கட்செவி அஞ்சல் மூலமாக சமூக ஊடகங்களில் பகிா்ந்து வருகின்றனா்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.