நிலக்கோட்டை அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த புகைப்படக் கலைஞா் விஷமருந்தி தற்கொலை

நிலக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தன்னுடன் தொடா்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த புகைப்படக் கலைஞா், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தன்னுடன் தொடா்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த புகைப்படக் கலைஞா், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தன்னுடன் தொடா்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த புகைப்படக் கலைஞா், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தன்னுடன் தொடா்பு வைத்திருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த புகைப்படக் கலைஞா், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள விளாம்பட்டி சிறுநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி பொன்ராஜ். இவரது மனைவி ரதிதேவி (38). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். ரதிதேவி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளாா்.

நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் (31). புகைப்படக் கலைஞரான இவருக்கும், ரதிதேவிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தகாத தொடா்பு இருந்து வந்துள்ளது.

இதனிடையே, ஓராண்டுக்கு முன் சுரேஷுக்கு திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னரும், ரதிதேவியுடன் சுரேஷ் தொடா்ந்து பழகி வந்துள்ளாா். இதையறிந்த அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் விரக்தி அடைந்த சுரேஷ், ரதிதேவியுடனான தொடா்பை தவிா்க்கத் தொடங்கியுள்ளாா். ஆனால், ரதிதேவி தொடா்பை விட மறுத்ததுடன், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமுகமாகப் பேசி முடிவெடுக்கலாம் எனக் கூறிய சுரேஷ், வெள்ளிக்கிழமை ரதிதேவியை வைகை அணைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளாா். வத்தலகுண்டு அடுத்துள்ள வெறியப்பநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரமாக ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அருகில் கிடந்த கல்லை எடுத்து ரதிதேவியின் தலையில் தாக்கியுள்ளாா். பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த ரதிதேவியை அங்கேயே விட்டுவிட்டு சுரேஷ் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, அவ்வழியாகச் சென்றவா்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரதிதேவியை பாா்த்து, வத்தலகுண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், ரதிதேவியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ரதிதேவி உயிரிழந்தாா்.

இது குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீஸாா், சுரேஷை தேடி வந்தனா்.

இதனிடையே, குரும்பப்பட்டியிலுள்ள கண்மாய் பகுதியில் சுரேஷ் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கிக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், சுரேஷை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com