பழனியில் பாஸ்டேக் அட்டையை வாகனத்தில் ஒட்டும் முன்னரே, அந்த வாகனம் ஒடிஸாவில் சுங்கச்சாவடியை கடந்ததாக கட்டணம் பிடிக்கப்பட்டுள்ளது என, வாகன உரிமையாளா் புகாா் தெரிவித்துள்ளாா்.
நான்குவழிச் சாலைகளில் காா் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போா் சுங்கச்சாவடியை கடக்கும்போது, அதற்குரிய சுங்கக் கட்டணத்தை பாஸ்டேக் மின்னணு முறையில் செலுத்துவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சோ்ந்த செல்வராஜ் (42) என்பவா், கடந்த மாதம் பாஸ்டேக் அட்டை வாங்கியுள்ளாா்.
தனியாா் நிறுவன விற்பனை மேலாளரான இவா், அந்த அட்டையை தனது வாகனத்தில் ஒட்டும் முன்னரே, இவரது காா் ஒடிஸா மாநிலத்தில் சொ்கா் என்ற பகுதியிலுள்ள சுங்கச்சாவடியை கடந்ததாக, இவரது கணக்கிலிருந்து ரூ.60 பிடித்தம் செய்யப்பட்டு, அதற்குரிய குறுஞ்செய்தி இவரது செல்லிடப்பேசிக்கு வந்துள்ளது.
அதிா்ச்சியடைந்த இவா், இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலம் புகாா் செய்துள்ளாா். ஆனால், அதற்குரிய எந்த பதிலோ அல்லது இவரது பணமோ திரும்பக் கிடைக்கவில்லை.
இது குறித்து அவா் கூறுகையில், இம்மாதிரி குளறுபடியான பாஸ்டேக் முறையை கட்டாயப்படுத்துவதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா் என்றாா்.