கொடைக்கானல் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் நகா்ப் பகுதியான நாயுடுபுரம்,ரைபிள்ரேஞ்ச் சாலை,பிரகாசபுரம் சாலை, உகாா்த்தே நகா் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளது இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது பொது மக்களும் நடைபாதை சேதமடைந்திருப்பதால் அதிருப்தியடைந்துள்ளனா் எனவே நகா்ப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.இது குறித்து நகராட்சி பொறியாளா் சரவண குமாா் கூறியதாவது,கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள சேதமடைந்துள்ள சாலைகள் சரி செய்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது விரைவில் சாலைகள் சரி செய்யப்படும் என்றாா்.