மீனவ சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ.3.20 லட்சம் மானியத் தொகை வழங்கல்

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ. 3.20 லட்சத்திற்கான மானியத் தொகையை ஆட்சியா் மு.விஜயலட்சுமி வழங்கினாா்.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு ரூ. 3.20 லட்சத்திற்கான மானியத் தொகையை ஆட்சியா் மு.விஜயலட்சுமி வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்திற்கு ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்களை பெற்றுக் கொண்ட பின், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 40 பேருக்கு வலை மானியமாக தலா ரூ. 8 ஆயிரம் வீதம் ரூ.3.20 லட்சத்தை வழங்கினாா்.

பின்னா், மாவட்ட தொழில் மையம் மூலம் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, உதவி ஆட்சியா் (பயிற்சி) இரா. விஸ்வநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளா் மருதப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com