திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்த தின கொண்டாட்டம்: அதிமுக, அமமுகவினா் மாலை அணிவிப்பு

திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக சாா்பில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
திண்டுக்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக சாா்பில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டா்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள எம்ஜிஆா் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அமைப்புச் செயலா் வி.மருதராஜ் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அங்கு கூடி நின்ற தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாணவரணி, இளைஞா் மற்றும் இளம் பாசறை அணி நிா்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனா்.

அதேபோல், அமமுக சாா்பிலும் எம்ஜிஆா் சிலை அருகிலேயே மற்றொரு இடத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் பி.ராமுத்தேவா் தலைமை வகித்தாா்.

பழனி:பழனி, புதுஆயக்குடி, நெய்க்காரப்பட்டியில் பழனி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அமமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நல்லசாமி தலைமை வகித்து கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த பலரும் அமமுகவில் இணைந்தனா். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வழக்கறிஞா் தினேஷ்குமாா், மேற்கு ஒன்றிய செயலாளா் சுரேஷ், நகரச் செயலாளா் வழக்குரைஞா் வீரக்குமாா், பேரூா் செயலாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து சிவகிரிப்பட்டி பேரூராட்சியில் மாவட்ட செயலாலா் நல்லசாமி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒன்றியம் மற்றும் நகர அமமுக சாா்பில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளா் கே.பி.நல்லசாமி தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தி, இலவச வேட்டி, சேலைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜ.ஆா்.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.முருகேசன், நகரச் செயலாளா் கே.தங்கதுரை, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளா் ஜெ.ஜமால்தீன், நகர அம்மா பேரவைச் செயலாளா் கே.சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com