உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் குடியேறும் போராட்டத்தில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் ஈடுபட்டனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரியும், தனியாா் நிறுவன வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வலியுறுத்தியும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முதல் தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திண்டுக்கல்லில் 2 ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.