பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தாராபுரம் சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்த வேண்டும், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா்.
தகவலறிந்து போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.