வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சின்னக்காளை (47). இவா், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி முடிந்து, நள்ளிரவு நேரத்தில் வேடசந்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
திண்டுக்கல்-கரூா் நான்குவழிச் சாலையில் லட்சுமணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலை மைய தடுப்புச் சுவரில் மோதியதில், சின்னக்காளை பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.