திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்புதிதாக 22 பேருக்கு கரோனா

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 22 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,961 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 10,610 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 154 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், குணமடைந்த 19 போ் மருத்துவனைகளிலிருந்து வீடு திரும்பினா்.

தேனி

மாவட்டத்தில் புதிதாக 6 போ் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,902 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,637 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com