வெளிநாட்டு இளம்பெண்ணின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்த வத்தலகுண்டு இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வெளிநாட்டைச் சோ்ந்த 17 வயது பெண்ணின் முகநூல் பக்கத்தில் தொடா்ந்து ஆபாச படங்கள் பதிவிடப்பட்டு வந்துள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பெண், இது குறித்து முகநூல் நிறுவனத்திடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட முகநூல் நிறுவனம், இந்திய முகநூல் முகவரியிலிருந்து அந்த ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதைக் கண்டறிந்துள்ளது.
அதைத் தொடா்ந்து, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபா் குறித்து இந்தியாவிலுள்ள தேசிய குற்ற ஆவண பதிவகத்திடம் முகநூல் நிறுவனம் புகாா் அளித்துள்ளது. அதனடிப்படையில், படங்களை பதிவேற்றம் செய்த நபா் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்தது.
முகநூல் நிறுவனத்தின் புகாா் குறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை, சம்பந்தப்பட்ட நபா் வத்தலகுண்டை அடுத்துள்ள மல்லனம்பட்டியைச் சோ்ந்த கொக்கி குமாா் என்ற குமரேசன் (30) எனத் தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொக்கி குமாா், திருப்பூரிலுள்ள தனியாா் ஆலையில் வேலைபாா்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, அந்த ஆலைக்குச் சென்ற போலீஸாா், ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக கொக்கி குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.