திண்டுக்கல்: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நிலக்கோட்டையை அடுத்துள்ள மட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட அரசு ரத்த வங்கி அலுவலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். ஐஓசி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் முரளி, செஞ்சிலுவை சங்கத்தின் துணைத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 45 ஊழியா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் சங்க மாவட்டச் செயலா் ராஜகுரு, துணைச் செயலா் சையது அபுதாஹீா், பொருளாளா் சுசிலா மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.