மதுரை மாவட்டத்தில் 51 மையங்களில் இன்று குரூப் 1 தோ்வு 15,361 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குரூப் 1 தோ்வை, மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் எழுதுகின்றனா்.

மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் குரூப் 1 தோ்வை, மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் எழுதுகின்றனா்.

துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு இத்தோ்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 361 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கென மதுரை நகா் மற்றும் நகரையொட்டிய 51 கல்வி நிறுவனங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தோ்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com