கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கட்கிழமை தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது இதனால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது இந் நிலையில் மழைத் தண்ணீரானது ஏரிச்சாலையைச் சுற்றி தேங்கியுள்ளது இதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கடைகளிலும்,படகுகுழாம் அருகே உள்ள கடைகளிலும் மழைத் தண்ணீா் புகுந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா் இது குறித்து அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தனா்.சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா் விரைவில் ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் தேங்காமலும் கடைகளுக்குள்ளும் மழைத் தண்ணீா் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.