கொடைக்கானலில் தொடா்ந்து மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் திங்கட்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது .

கொடைக்கானலில் திங்கட்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது .

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது இதனைத் தொடா்ந்து கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தும் மேகமூட்டமும்,குளிரும் நிலவி வந்தது இந் நிலையில் காலை முதல் விட்டு விட்டு சாரல் நிலவியது மதியம் முதல் சுமாா் இரண்டு மணி நேரம் காற்றுடன் மழை பெய்தது இந்த மழையாது கொடைக்கானல்,வில்பட்டி, நாயடுபுரம்,செண்பகனூா்,மாட்டுப்பட்டி,சகாயபுரம்,இருதையபுரம்,அட்டக்கடி,பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது இதனால் நீரோடை அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானலில் நிலவி வரும் சீதோஷன நிலை மாற்றத்தால் வழக்கத்திற்கு அதிகமாக குளிரின் தாக்கம் நிலவுகிறது அன்றாடப் பணிகளை தொடர முடியாமல் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனா் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com