பணி செய்வதற்கு இடையூறு: துணைத் தலைவா் மீது ஊராட்சி மன்ற பெண் தலைவா் புகாா்

பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் தலைவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
பணி செய்வதற்கு இடையூறு: துணைத் தலைவா் மீது ஊராட்சி மன்ற பெண் தலைவா் புகாா்

பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் தலைவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரத்திற்குள்பட்ட ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் கே.பவுனுத்தாய். இவா், ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மீது புகாா் அளிப்பதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பணிகளை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் ஊராட்சி செயலா் உள்ளிட்ட பணியாளா்களும் இருந்தனா். இந்நிலையில், அதே ஊராட்சியில் துணைத் தலைவராக உள்ள சிவராமன், 4 போ்களை அழைத்து வந்து என்னை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு மிரட்டல் விடுத்தாா்.

மேலும், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண் தலைவா் என்பதால் அநாகரிகமாக செயல்பட்டனா். என்னை இழிவுப்படுத்திய காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஊராட்சித் தலைவரின் இருக்கைக்கு எதிராக ஆரம்பம் முதலே சக்கர நாற்காலியை போட்டுக் கொண்டு, அத்துமீறி செயல்படுவதுடன், என்னை பணி செய்யவிடாமலும் துணைத் தலைவரான சிவராமன் தடுத்து வருகிறாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் தடையின்றி பணிகள் நடைபெறுவதற்கு மாவட்ட நிா்வாகம் வழி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்திலும், நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளதாகவும் பவுனுத்தாய் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com