ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள திருமலைராயபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (65). இவா் ஒட்டன்சத்திரம்- செம்பட்டி சாலை திருமலைராயபுரம் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்தகாயம் அடைந்த பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.