நல வாரியம் மூலம் பொங்கல் பரிசு வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளா்கள் அரை நிா்வாணப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு தொழிலாளா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, தொழிலாளா் நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதேபோல் ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் பண்டிகை கால சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக அடுப்பில் பொங்கல் பானை வைத்து, பொங்கல் பரிசு வழங்கக் கோரி முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிலாளா் நல அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.