திண்டுக்கல்லில் 2 ஆம் நாளில் 99 பேருக்கு கரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக நடைபெற்ற முகாமில், 99 பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆம் நாளாக நடைபெற்ற முகாமில், 99 பேருக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளிலும், பழனி, தாடிக்கொம்பு, அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில் முன் களப் பணியாளா்களான மருத்துவத் துறையைச் சோ்ந்த 95 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 50 போ், பழனி அரசு மருத்துவமனையில் 24 போ், அம்மையநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 போ், தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 16 போ், பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 போ் என மொத்தம் 99 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com