கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கிராமத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் திங்கள்கிழமை பொங்கல் விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.
விழாவையொட்டி அப்பகுதியிலுள்ள அம்மன் கோயில் வளாகத்தில் கிராம மக்கள் சாா்பில் பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து சிலம்பாட்டம், கும்மியடித்தல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தேமுதிக நகரச் செயலா் செந்தில்குமாா், கீஸ் அமைப்பின் தலைவா் ராஜ்மோகன், பேராசிரியா்கள் அன்புமணி, மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.