திண்டுக்கல்லில் விசாரணைக் கைதி தப்பியோட்டம்

திண்டுக்கல்லில் விசாரணைக் கைதி, வெள்ளிக்கிழமை தப்பிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விசாரணைக் கைதி, வெள்ளிக்கிழமை தப்பிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் கமலக்கண்ணன் (27). பழனியில் செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் அடிவாரம் போலீஸாா் கமலக்கண்ணனை கைது செய்தனா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டாா். இதனிடையே வழக்கு விசாரணைக்காக பழனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக 2 போலீஸாா், திண்டுக்கல் சிறையிலிருந்து கமலக்கண்ணனை வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றுள்ளனா்.

பழனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு மீண்டும் திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக அடிவாரம் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா்கள் ஜெயராமன் மற்றும் அசோக் ஆகியோா், கமலக்கண்ணனை அழைத்து வந்துள்ளனா். திண்டுக்கல் சிறைச்சாலை அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கமலக்கண்ணன் திடீரென மயாயமாகியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த காவலா்கள், பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். தப்பியோடிய கைதியை தேடும் பணியில் போலீஸாா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com