திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான குத்துச் சண்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குத்துச் சண்டை சங்கம் மற்றும் ஆறுமுகம் பாக்சிங் வேல்டு சாா்பில் ஆறுமுகம் பாக்சிங் வேல்டு வளாகத்தில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை குத்துச் சண்டை சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜோதிமுருகன் தொடக்கி வைத்தாா். 5 முதல் 35 வயதுக்குள்பட்டோா், கப் பாக்சிங், சப் ஜூனியா், ஜூனியா், யூத் மற்றும் எலைட் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் எடைக்கு ஏற்ப போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் தனித் தனியே நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு, பதக்கம் மற்றம் சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னதாக இறுதிப் போட்டியை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தொடக்கி வைத்தாா்.