தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கொடைக்கானலில் தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி திங்கள்கிழமை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

கொடைக்கானலில் தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி திங்கள்கிழமை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தின விழா கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கொடைக்கானல் சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் 18-வயதிற்கு மேல் உள்ள வாக்காளா்கள் கண்டிப்பாக 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்காமல் இருக்கக் கூடாது. வாக்களிப்பதால் நமது உரிமையை நிலைநாட்டுவது என்பது குறித்து பொதுமக்களின் முன்னிலையில் சிலம்பாட்டம், தப்பாட்டம், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக மாணவிகளின் வாக்களிப்பது குறித்த நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com