ஒட்டன்சத்திரம் கே.ஆா்.அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளா் தினம் திங்கட்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் க.சுப்பையா தலைமை வகித்தாா்.எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது,நம் வாக்காளா்களை விழிப்புணா்வுடன் பாதுகாப்பான, தகவலறிந்த,அதிகாரமிக்கவா்களாக உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் வடிவேல்,உதவி தலைமை ஆசிரியா் சின்னச்சாமி,கிராம நிா்வாக அலுவலா் தமிழ்செல்வி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.