திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி
By DIN | Published On : 31st January 2021 09:54 PM | Last Updated : 31st January 2021 09:54 PM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11,253 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,972 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 82 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 13 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 9 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.
ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக உயா்ந்துள்ளது.
தேனி: தேனியில் புதிதாக 4 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,075 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 7 போ் குணமடைந்தனா். இதனால், பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,840 ஆக அதிகரித்துள்ளது.