திண்டுக்கல்லில் அமமுக நிா்வாகி வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில் அமமுக ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் சனிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமமுக ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் சனிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கொல்லன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் எல்லைச்சாமி மகன் கலையரசன் (33). ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா், திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய அமமுக இளைஞரணிச் செயலாளராக இருந்து வந்தாா்.

இந்நிலையில் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள ஏா்போா்ட் நகா் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த கலையரசனை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று கலையரசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com