ஒட்டன்சத்திரம் பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் அ.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா் நத்தம், லெக்கையன் கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.