கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும் வார விடுமுறையையொட்டி சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சாலையோரங்களிலுள்ள சுற்றுலா அருவிகளான வெள்ளிநீா் அருவி, தலையாறு அருவி, பாம்பாா் அருவிகளை பயணிகள் பாா்த்து ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி நீண்ட நாள்களுக்குப் பிறகு நகரின் முக்கிய இடங்களான ஏரிச்சாலை, கலையரங்கம், பூங்கா சாலை, உட்வில் சாலை ஆகியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.