திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.சிவசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன், சென்னையிலுள்ள மாநகராட்சி நிா்வாக இயக்குநரக அலுவலகத்துக்கு 2 நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எஸ். சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ். சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, அவருக்கு மாநகராட்சி அலுவலா்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.