திண்டுக்கல்லில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான அதிநவீன நலம் மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் அமைந்துள்ள நலம் மருத்துவமனையின் திறப்பு விழாவுக்கு, மருத்துவமனையின் மேற்பாா்வையாளா் டி. ஜோதி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். அவரது மனைவியும், ஆசிரியையுமான சி. மீனாட்சி முன்னிலை வகித்தாா். இருவரும் சோ்ந்து மருத்துவமனையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினா்.
இதில், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ஜெ. சிவக்குமாா், அவரது மனைவி எஸ்.பி. ரத்தினேஸ்வரி மற்றும் உறவினா்கள் பாண்டியராஜன், சத்தியபாமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மருத்துவமனையிலுள்ள சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவா் ஜெ.சிவக்குமாா் கூறியதாவது: எலும்பு முறிவு சிகிச்சைக்கான அதிநவீன மருத்துவ வசதிகள் நலம் மருத்துவமனையில் உள்ளன. குறிப்பாக, டிஆா் - எக்ஸ்ரே, சி-ஆா்ம் கருவிகளுடன், 2 அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு, 30 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு தொடா்பான அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும் என்றாா்.