திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 38 பேருக்கு கரோனா: 4 போ்பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக  38 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக  38 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 17ஆம் தேதி வரை 31,943  போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,113 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 24 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 22 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சைப் பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 617 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,769 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 41,980 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேனியைச் சோ்ந்த 47 வயது நபா், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது பெண் என 2 போ் உயிரிழந்தனா்.

இதனால், கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது மொத்தம் 278 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com