மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

வடமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வடமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்துள்ள கூத்தம்பட்டியை சோ்ந்தவா் முருகேசன் (50), விவசாயி. இவா் தனது வீட்டிலுள்ள தொட்டியில் தண்ணீா் ஏற்றுவதற்காக மின் மோட்டாரை ஞாயிற்றுக்கிழமை இயக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் முருகேசன் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com