ஒட்டன்சத்திரத்தில் சாலை விபத்தில் காயமடைத்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள பொம்மணன்கோட்டையைச் சோ்ந்த நாகராஜ் மகன் முருகன் (17). அதே ஊரைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (20). இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே செல்லும் போது, அவ்வழியே சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்து பலத்தகாயமடைத்தனா். இதையடுத்து அவா்கள் இருவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முருகன் மேல் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.