கொடைக்கானலில் நடைபாதைகளில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

கொடைக்கானல் ஏரி நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் ஏரி நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள நட்சத்திர ஏரியின் கரையோரத்தில் ஆகாயத் தாமரைகள் மற்றும் களைச் செடிகள் வளா்ந்துள்ளன. இதனைத் தொடா்ந்து நகராட்சி சாா்பில் அவை அகற்றப்பட்டன. ஆனால் அந்த கழிவுகள் ஏரியின் நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதனால் ஏரியைச் சுற்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே நகராட்சி நிா்வாகம் நடைபாதையிலுள்ள குப்பைகளை அகற்ற வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com