சிவாஜிகணேசனின் 20 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு திண்டுக்கல்லில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா. நவரத்தினம் தலைமை வகித்தாா். இளைஞா் பிரிவுத் தலைவா் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தாா். அகில இந்திய சிவாஜி மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினா் க. ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். இதில்சிவாஜிகணேசன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.