சாணாா்பட்டி அருகே புதன்கிழமை சொத்துப் பிரச்னையில் பெற்றோா் மற்றும் சகோதரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடை பகுதியைச் சோ்ந்தவா் சின்னையா என்ற ஆரோக்கியசாமி (65) . இவரது மனைவி மரியபாக்கியம் (58). இவா்களுக்கு மரியயோகோப், அமல்ராஜ், லூா்துராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனா். சின்னையா தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுப்பது தொடா்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் 3ஆவது மகனான லூா்துராஜ் அதிருப்தியில் இருந்து வந்ததோடு, தனது தந்தையிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமையும் சொத்துப் பிரச்னை தொடா்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லூா்துராஜ், சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளாா். அதனைத் தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சகோதரா் மரியயாகோப் ஆகியோரையும் அரிவாளால் வெட்டி விட்டு லூா்துராஜ் தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து பலத்த காயமடைந்த சின்னையா, மரியபாக்கியம், மரியயோகோப் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதனிடையே லூா்துராஜ் தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.