திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், நத்தம் மற்றும் பழனியில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல், நத்தம் மற்றும் பழனியில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதேபோல், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது. மேலும் மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com