பழனியில் கரோனா தடுப்பூசி முகாம்

பழனி வடக்குரத வீதியில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இங்குள்ள மல்லிமடம் மற்றும் பாண்டிய வேளாளா்
பழனியில் கரோனா தடுப்பூசி முகாம்

பழனி வடக்குரத வீதியில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இங்குள்ள மல்லிமடம் மற்றும் பாண்டிய வேளாளா் மடத்தில் வாா்டுகள் 1,2,3,14,15,16,17 ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. முகாமை திமுக நகரச் செயலா் தமிழ்மணி தொடக்கி வைத்தாா். முன்னாள் கவுன்சிலா்கள் இந்திரா திருநாவுக்கரசு, சுரேஷ் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். வட்டார மருத்துவ அதிகாரி ராஜேஸ்வரி, சுகாதார மேற்பாா்வையாளா் அப்துல் வகாப் உள்ளிட்டோா் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க ஏற்பாடுகள் செய்திருந்தனா்.

முகாமில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி, கவுன்சிலா்கள் காளீஸ்வரிபாஸ்கரன், சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com