கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோயில்களின் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோயில்களின் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணிக்கு 35 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் முன்னாள் படைவீரா்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. விருப்பமும், உடல் தகுதியும் வாய்ந்த முன்னாள் படை வீரா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தில் பணி விலகலுக்கான அசல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னதாக ஆஜராகி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com