பழனியில் வியாழக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் தோண்டப்பட்ட குழியில் கொட்டி மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்க காலத்தில், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் மூவாயிரத்துக்கும் அதிகமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் பழனி சாா்பு- நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவின்பேரில் நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் குழி தோண்டப்பட்டு அதில் கொட்டி அழிக்கப்பட்டன.